உள்ளூர் செய்திகள்

ஓசூர் 23-வது வார்டு பகுதியில் மேயர் சத்யா, திடீர் ஆய்வு

Published On 2022-11-17 09:53 GMT   |   Update On 2022-11-17 09:53 GMT
  • சாந்தி நிகேதன் குடியிருப்பு பகுதியில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  • கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

ஓசூர்,

ஓசூர் மாநகராட்சி 23-வது வார்டுட்பட்ட சாந்தி நிகேதன் குடியிருப்பு பகுதியில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வார்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் அவர் கேட்டறிந்தும், மழைக்காலங்களில் கொசு உற்பத்தியாவதை தடுக்கும் விதமாகவும் மழைநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

பின்னர், குடியிருப்பு மக்களின் குறைகளையும் சத்யா கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது மாநகராட்சி பொறியாளர்கள் ராஜேந்திரன், பிரபாகரன், ஸ்ரீகுமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News