பர்கூரில், கல்லூரி விடுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் திடீர் ஆய்வு
- கல்லூரி மாணவிகள் விடுதியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என கேட்டறிந்தார்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியுடன், பர்கூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவிகளிடம், உணவு, குடிநீர், மின்சார வசதிகள், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என கேட்டறிந்தார்.
பின்னர் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை ஆய்வு செய்த அவர், எந்தெந்த மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் படிக்கிறீர்கள் எனவும், அவர்களது கல்வி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஏதேனும் குறைகள் இருப்பின் உடனடியாக தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார். அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன் தாசில்தார் பன்னீர்செல்வி மற்றும் விடுதி காப்பாளர்கள் உடன் இருந்தனர்.