உள்ளூர் செய்திகள் (District)

கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளரும், மாவட்டச் செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்தபடம்.

தருமபுரியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Published On 2022-07-21 09:42 GMT   |   Update On 2022-07-21 09:42 GMT
  • தமிழக அரசை கண்டித்து வருகிற 25-ம் தேதி காலை10 மணிக்கு தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற உள்ளது.
  • கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளரும், மாவட்டச் செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தலைமை தாங்கினார். கட்சியின் அமைப்பு செயலாளர் கே.சிங்காரம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், எம்.எல்.ஏக்கள்.கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் நல்லதம்பி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளரும், மாவட்டச் செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

தருமபுரி மாவட்டத்திற்கு விரைவில் வருகை தரவுள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு தருமபுரியில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, தமிழக அரசை கண்டித்து வருகிற 25-ம் தேதி காலை10 மணிக்கு தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கொள்வது, அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிப்பது, அவரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் தகடூர் விஜயன், பழனிசாமி, மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் வேலுமணி, கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், நீலாபுரம் செல்வம், மதிவாணன், பழனி, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் பூக்கடை ரவி நன்றி கூறினார்.

Tags:    

Similar News