உள்ளூர் செய்திகள்

கம்பைநல்லூர் சந்தையில் ரூ.20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

Published On 2022-12-24 09:46 GMT   |   Update On 2022-12-24 09:46 GMT
  • சந்தையில் வாரந்தோறும் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது.
  • ரூ. 20 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

அரூர்,

கம்பைநல்லூர் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில் வாரந்தோறும் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது.

இங்கு நடைபெறும் ஆடு, கோழி உள்ளிட்ட வாங்க விவசாயிகளும், ஆடு வளர்ப்பவளும், விற்பனைக்கு கொண்டு வந்தனர் ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

நேற்று நடந்த சந்தையில் 290க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.

10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு விலை ரூ. 5,300 முதல் ரூ.7,300 வரையும் விற்பனையானது,

தொத்தம் ரூ. 20 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News