கிருஷ்ணகிரியில் மழைநீர் கால்வாய் தூர் வாரும் பணி
- நகரின் அனைத்து பகுதிகளிலும் சாக்கடைக் கால்வாயை புதிதாக உயர்த்திக் கட்ட வேண்டும்.
- மழைநீர் கால்வாய் தூர் வாரும் பணியை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகர் பகுதியில் கடந்த, 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோர குப்பைகள் மழைநீருடன் கலந்து மழைநீர் கால்வாயில் அடைப்பு களுடன் ஆங்காங்கே தேங்கி நின்றது. இது குறித்து பொதுமக்கள் அளித்த புகார்படி நேற்று கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதியில் மழைநீர் கால்வாய் தூர் வாரும் பணியை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
அவருடன் நகராட்சி ஆணையாளர் வசந்தி, உடன் இருந்தார்.
பின்னர் நகராட்சி தலைவர் பரிதா நவாப் நிருபர்களிடம் கூறிய தாவது:-
கிருஷ்ணகிரி நகராட்சி யில் உள்ள சாக்கடைக் கால்வாய்கள் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பல இடங்களில் சாலை மேடாக உள்ளதால் கால்வாய்கள் பல இடங்களில் மிகவும் பள்ள மாகவும், ஆபத்தாகவும் உள்ளது. எனவே நகரின் அனைத்து பகுதிகளிலும் சாக்கடைக் கால்வாயை புதிதாக உயர்த்திக் கட்ட வேண்டும். குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும்.
இதற்காக 100 கோடி ரூபாயும், மீதமுள்ள பாதாள சாக்கடைக் கால்வாயை அமைக்க 75 கோடி ரூபாயும், சாலை அமைக்க 30 கோடி ரூபாயும், புதிய பஸ் நிலையம் அருகில் திருமண மண்டபம் மற்றும் பல்நோக்கு கட்டடம் கட்ட 50 கோடி ரூபாயும் என மொத்தம் 255 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க ப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தி.மு.க., நகர செயலாளர் நவாப், நகர் மன்றத் துணைத் தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.