மயிலாடுதுறையில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்- கலெக்டர் தகவல்
- மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை மனுக்களாக அளிக்கலாம்.
- தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், இணை இயக்குநர் சுகாதாரபணிகள் ஆகிய துறைகளை கொண்டு மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருகின்ற 13.10.2022 அன்றுகாலை 11 மணிஅளவில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகவளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்தி றனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளிக்கலாம்.
மேலும் இது நாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவ சான்றுநகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளிவிலான தற்போதைய போடடோ 1, கைப்பேசி எண், ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.