பென்றஹள்ளி கிராமத்தில் பெரியசாமி மூலவர் சிலைக்கு ஊராட்சி தலைவர் தலைமையில் சிறப்பு பூஜை
- திருப்பதி கோவிலில் இருந்து செய்யப்பட்டு பென்றஹள்ளி கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது.
- ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அரசம்பட்டி ஊராட்சி பென்றஹள்ளி கிராமத்திற்கு பெரியசாமி ஆலய மூலவர் சிலை திருப்பதி கோவிலில் இருந்து செய்யப்பட்டு பென்றஹள்ளி கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது.
இதைதொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் தலைமையில் மேல தாளத்துடன் பட்டாசு வெடித்து ஊர்வலமாக வந்து பென்றஹள்ளி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் வீட்டு முன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் குட்டால்( எ) பெரியண்ணன். தர்மகர்த்தா ராமலிங்கம், நிர்வாகிகள் சங்கர், மற்றொரு சங்கர், வையம்பட்டி முனுசாமி, பில்ல கொட்டாய் மாது, செல்வம், பெரியசாமி, வனத்தூர் முனுசாமி, பள்ளத்தூர் செல்வம், வையம்பட்டி சரவணன், ரஜினி மற்றும் பூசாரிகள் பெரியசாமி, அர்ஜுனன், வேலன், வெங்கட்ராமன், சபரி, மாரியப்பன் உள்பட ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.