உள்ளூர் செய்திகள் (District)

மத்தூர் ஒன்றியம் ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி கோட்டப்பதி பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

ராமகிருஷ்ணம்பதி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Published On 2022-10-05 09:40 GMT   |   Update On 2022-10-05 09:40 GMT
  • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
  • இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் மாது செய்திருந்தார்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி கோட்டப்பதி பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் தெருவிளக்கு, குடிநீர், சிமெண்ட் சாலை, ஆழ்துழை கிணறு, இலவச வீட்டுமனை பட்டா, சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனுக்கள் வழங்கினர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட தணிக்கை மற்றும் தொகுதி ஆய்வாளர் சுசீலாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குறள்வாணி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கனகராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கல்வித்துறை, சுகாதாரத் துறை, வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை, அங்கன் வாடி பணியாளர்கள், சுய உதவிக் குழு பெண்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் மாது செய்திருந்தார்.

Tags:    

Similar News