தஞ்சையில், வீடுகளில் கொள்ளையடித்த வாலிபர் சிக்கினார்
- தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
- வீடுகளில் நகை -பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து இரவு நேரங்களில் குற்றச்சம்பவம் நடைபெற்று வந்தது.
இதை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பா ர்வையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீஸ்காரர்கள் கோதண்ட பாணி, திருக்குமரன், அருண்மொழிவர்மன், ரகு ஆகியோர் அடங்கிய தனிப்ப டைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மெயின் ரோடு கரசங்கால் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 26 ) என்பவரை பிடித்து விசாரித்தனர்.அதில் அவர் தஞ்சையில் வீடுகளில் நகை -பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.குற்றவாளியை பிடிப்ப தற்கு மாவட்ட சைபர் கிரைம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குபேந்திரன், பிரகதீஸ்வரன், திருவரம்பூர் உட்கோட்ட குற்ற பிரிவு தலைமை காவலர் ஹரி மற்றும் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு தலைமை காவலர் ஜவகர் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளியை விரைந்து பிடித்த தனிப்படை போலீசார் மற்றும் உறுதுணையாக இருந்த போலீசாரை , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பாராட்டினார்.