உள்ளூர் செய்திகள்

கலெக்டர் சாரூஸ்ரீ

திருவாரூரில், 23-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்- கலெக்டர் தகவல்

Published On 2023-05-20 09:47 GMT   |   Update On 2023-05-20 09:47 GMT
  • வருகிற 23-ந்தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
  • மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ வெளியி ட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியிருப்ப தாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட த்திலு ள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அன்றைய தினம், மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீதான உள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும்.

வயது வரம்பு ஏதும் இல்லை. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளு க்குட்பட்டு பரிசீலிக்க ப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.

வருகையின் போது இருப்பிட முகவரிக்கான ஆதாரம் குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் இரண்டு நகல்கள் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றைத் தவறாது கொண்டு வர வேண்டும்.

இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும்.

இந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனா ளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News