உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

Published On 2022-08-27 10:31 GMT   |   Update On 2022-08-27 10:31 GMT
  • பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகுமாறு அறிவுறுத்தினர்.
  • பணிதள பொறுப்பாளர்கள், ஊராட்சி பணியாளர்கள், மக்கள் நல பணியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள உம்பளப்பாடி ஊராட்சியி ல்முதல் அமைச்சரின் மக்களை தேடி மருத்துவம் திட்டம் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் யசோதா சரவணன்தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் சச்சிதா னந்தம் முன்னிலை வைத்தார்.

உம்பளப்பாடி ஊராட்சி க்கு உட்பட்ட இளங்கார்குடி, மேட்டு தெரு, தைக்கால், கருப்பூர், உள்ளிட்ட கிராம மக்களுக்கு மக்களை தேடி மருத்துவத்தின் திட்டத்தை விளக்கி வருகைதந்த பொது மக்க ளுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்ப ட்டு மேல் சிகிச்சை பெறுவோர் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகுமாறு அறிவுறுத்தினர்.

நிகழ்ச்சியில் மருத்துவ குழுவினர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணி தள பொறுப்பாளர்கள், ஊராட்சி பணியாளர்கள், மக்கள் நல பணியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News