உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் வீடுகளில் நகை- பணம் கொள்ளை

Published On 2023-03-21 08:58 GMT   |   Update On 2023-03-21 08:58 GMT
  • வேல்குமார் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
  • கதவை உடைத்து உள்ளே சென்ற கும்பல் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த இட்டேரி பாலாஜி கோல்டன்சிட்டியில் வசித்து வருபவர் வேல்குமார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

திருட்டு

கடந்த 19-ந்தேதி இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் அங்கு புகுந்துள்ளனர். அங்கு இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.

இதேபோல் அதே பகுதியில் வசிக்கும் இசக்கிதாஸ் என்பவரது வீட்டில் இருந்த 10 கிராம் தங்கநகை மற்றும் சில்வர் பொருட்களை மர்மநபர்கள் அதே நாளில் திருடிச்சென்றனர்.

ரூ.4 லட்சம் பணம்

பின்னர் அங்குள்ள வெங்கடேஷ் என்பவரது வீட்டுக்கும் அந்த கும்பல் சென்றுள்ளது. அப்போது வெங்கடேஷ் தனது மனைவி முத்துலெட்சுமியுடன் குமரிக்கு சென்றுவிட்டார். இதனால் ஆட்கள் யாரும் அங்கு இல்லை என அறிந்த அந்த கும்பல் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றது.

அங்குள்ள பீரோவில் இருந்த 74 கிராம் தங்கநகைகள் மறறும் ரூ.4 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மறுநாள் அவர்கள் வந்து பார்த்தபோது 3 வீடுகளிலும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

இதுதொடர்பாக முன்னீர் பள்ளம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News