உள்ளூர் செய்திகள்

காளியம்மன் கோவில் தேர் திருவிழா

Published On 2023-04-07 09:52 GMT   |   Update On 2023-04-07 09:52 GMT
  • நார்த்தம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  • காளியம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து பக்தர்களின் வெள்ளத்தில் தேர் திருவீதி உலா நடைபெற உள்ளது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நார்த்தம் பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் வெகு விமர்சையாக நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இன்று காலை முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது.

நார்த்தம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை காளியம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து பக்தர்களின் வெள்ளத்தில் தேர் திருவீதி உலா நடைபெற உள்ளது. இவ்விழாவினை ஊர் பொதுமக்கள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News