உள்ளூர் செய்திகள்

கனிமொழி எம்.பி. நாளை கோவை வருகை

Published On 2022-10-11 10:15 GMT   |   Update On 2022-10-11 10:15 GMT
  • உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு.
  • அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

வடவள்ளி,

கோவை மாவட்ட தி.மு.க செயலா ளர்கள் மாநகர் மாவட்டம் கார்த்திக், தெற்கு மாவட்டம் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டம் தொண்டா முத்தூர் ரவி ஆகியோர் கூட்டாக வெளியி ட்டுள்ள அறிக்கை யில் கூறியிரு ப்பதாவது:-

தி.மு.க துணை பொதுச்செ யலாளர் கனிமொழி எம்.பி. நாளை காலை கோவை வருகை தர உள்ளார். அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எனவே ஒருங்கிணைந்த தி.மு.க நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், பொதுக்குழு உறுப்பினர்கள், நகரகழகம், பகுதி கழகம், ஒன்றிய கழகம், பேரூர் கழகம், ஒன்றிய கழகம் செயலாளர்கள், மண்டல் தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், நிலைகுழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், வட்டக் பொறுப்பாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள், தொண்டர்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News