உள்ளூர் செய்திகள்

இருளப்பபுரம் பகுதியில் மேயர் மகேஷ் இன்று ஆய்வு செய்த காட்சி.

இருளப்பபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் புதிய நிழற்குடை

Published On 2022-12-06 08:08 GMT   |   Update On 2022-12-06 08:08 GMT
  • பழுதடைந்த நிழற்குைடயை அகற்ற மேயர் மகேஷ் உத்தரவு
  • உடனடியாக கழிவுநீர் ஓடை களை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சுத்தம் செய்ய மேயர் மகேஷ் உத்தர விட்டார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநக ராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மேயர் மகேஷ் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை 39 வார்டுகளில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட நிலையில் இன்று 42-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது இருளப்புரம் பகுதியில் பயணிகள் நிழற்குடை ஒன்று மிகவும் மோசமான நிலையில் பழுத டைந்து காணப்பட்டது.இதையடுத்து அந்த பயணிகள் நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.அந்த இடத்தில் புதிதாக நிழற்குடை அமைக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

குமரி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் அந்த பகுதியில் புதிய நிழற்குடை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இருளப்பபுரம் சந்திப்பில் பூங்கா அமைப்பது தொடர் பாகவும் ஆய்வு நடத்தப்பட் டது. அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள மேயர் மகேஷ் அதிகாரி களிடம் அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து வேதநகர் பீச் ரோடு பகுதி களில் அவர் ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதற்கான போதிய நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் சீரமைக்கப்படும் என்று மேயர் மகேஷ் உறுதி அளித்தார்.

அந்த பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடைகளில் மணல் நிரம்பி காணப்பட்டது. உடனடியாக கழிவுநீர் ஓடை களை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சுத்தம் செய்ய மேயர் மகேஷ் உத்தர விட்டார்.

ஆய்வின் போது மாநக ராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News