உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் :நேரு யுவக்கேந்திரா

குமரி மாவட்டத்தில் சிறந்த இளைஞர் மன்ற தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published On 2022-12-11 08:35 GMT   |   Update On 2022-12-11 08:35 GMT
  • கலெக்டர் அரவிந்த் தகவல்
  • 2023-ம் ஆண்டு நடை பெறும் தேசிய இளையோர் கலை விழாவின் போது இந்த விருதைப் பெறுவார்கள்.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

ஒவ்வொரு வருடமும், நேரு யுவக்கேந்திரா சார்பில் செயல் பாடுகளில் சிறந்து விளங்கும் இளைஞர் மன்றம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. சிறந்த மன்றமாக தேர்வு செய்யப்படும் மன்றத்துக்கு ரூ.25 ஆயிரத்திற்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் முதல் பரிசை பெறும் மன்றம், மாநில அளவில் நடைபெறும் போட்டி யில் கலந்து கொள்ளும். மாநில அளவில் முதல் பரிசு ரூ.75 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மாநில அளவில் முதல் பரிசு பெறும் மன்றங்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள். தேசிய அளவில் வெற்றி பெறுபவர்கள் முதல் பரிசாக ரூ.3 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.1 லட்சமும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும் பெறுவார்கள். தேசிய அளவில் வெற்றி பெறும் மன்றம்

2023-ம் ஆண்டு நடை பெறும் தேசிய இளையோர் கலைவிழாவின்போது இந்த விருதைப் பெறுவார்கள்.

மாவட்ட அளவிலான விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மன்றங்கள் நேரு யுவகேந்திராவில் இணைக்கப்பட்ட மன்றமாக இருக்க வேண்டும். முக்கிய மாக தமிழ்நாடு அரசு பதிவு சட்டப்படி பதிவு பெற்ற மன்றமாக இருத்தல் வேண்டும். ஏப்ரல் 2021-ல் இருந்து 31 மார்ச் 2022-க்கு உள்ளாகவோ அல்லது அதற்கு முன்பாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.

பதிவு வருடா வருடம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வருடத் துக்கான விண்ணப்பங்க ளை நாகர்கோவில் பறக்கை ரோட்டில் பிரியா நகரில் உள்ள நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022-ம் ஆண்டுக் கான மன்ற செயல்பாடுகளை மட்டுமே குறிப்பிட வேண்டும். மேலும் ஒவ்வொரு செயல்பாட் டிற்கும் அதற்கான சான்று களை இணைக்க வேண்டும். பத்திரிக்கைச் செய்தி, புகைப்படம், சான் றிதழ் போன்றவைகளை அத் தாட்சிகளாக இணைக்க லாம்.

2021-2022-ம் ஆண்டுக் கான தணிக்கை சான்றி தழையும் அதனுடன் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைந்த குழு ஆராய்ந்து விருதுக்கான மன்றத்தை தேர்வு செய்வார்கள். சிறந்த இளையோர் மன்ற விருதுக்கான விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 13.12.2022 ஏற்க னவே மாவட்ட அளவிலான சிறந்த மன்ற விருதைப் பெற்ற மன்றம் அந்த விருது பெற்று 2 ஆண்டுகள் முடிவடைந்திருந்தால் அவர்களும் இந்த விருதுக் காக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கூறி உள்ளார்.

Tags:    

Similar News