உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்த படம் 

கன்னியாகுமரியில் வீட்டை உடைத்து கொள்ளை

Published On 2023-01-22 08:10 GMT   |   Update On 2023-01-22 08:10 GMT
  • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
  • கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி வடக்கு குண்டல் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 47). இவர் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பக்க கதவு இன்று உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜீவாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுந்த ரமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற னர். அப்போது ஜீவா வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்து பீரோவையும் உடைத்துள்ளனர்.

வீட்டில் நகை பணம் எவ்வளவு திருட்டு சென்றது என்ற விவரம் தெரியவில்லை .இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து பதிவு செய்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News