உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

ஈத்தாமொழி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-01-17 07:28 GMT   |   Update On 2023-01-17 07:28 GMT
  • மின்கம்பம் மீது மோதியது
  • ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

நாகர்கோவில்:

ஈத்தாமொழி அருகே கீழ கிருஷ்ணன் புதூரை சேர்ந்தவர் தங்கபாண்டியன் இவரது மகன் வினோத் (வயது 24). மேலகிருஷ்ணன் புதூரை சேர்ந்தவர் சதீஷ் (20), இலந்தையடி தட்டு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்ராம் (22) இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

நேற்று இரவு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மேலகிருஷ்ணன் புதூர்-ஈத்தாமொழி சாலையில் சென்று கொண்டிருந்தனர். செம்மங்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் இவர்களின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறு மாறாக ஓடியது. திடீரென ரோட்டோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோட் டார் சைக்கிள் மோதியது.

மோதிய வேகத்தில் வினோ,சந்தோஷ் ராம், சதீஷ் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி வினோ பரிதாபமாக இறந்தார்.சந்தோஷ் ராம், சதீஷ் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

விபத்து குறித்து ஈத்தா மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலி யான வினோவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கி றது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமா னோர் அங்கு திரண்டு உள்ளனர். வினோ பலியான சம்பவம் அவரது நண்பர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News