உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி கடல் 

குளம்போல் காட்சி அளித்த கன்னியாகுமரி கடல்

Published On 2022-12-09 09:00 GMT   |   Update On 2022-12-09 09:00 GMT
  • கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர்.
  • மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.

கன்னியாகுமரி:

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக இன்று கன்னியாகுமரியில்கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காணப்பட்டது.

இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை பகுதியில் கடல் உள்வாங்கி இருந்தாலும் கன்னியாகுமரியில் வங்க கடல் பகுதியில் கடலின் தன்மை இயல்பு நிலையில் காணப்பட்டதால் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை8மணிக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார்கள். அதேசமயம் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அலையே இல்லாமல் அமைதியாக கடல் குளம் போல் காணப்பட்டதுஇதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட முடியாமல் திகைத்துபோய் நின்றனர்.

Tags:    

Similar News