மோட்டார் சைக்கிளில் இருந்து வியாபாரி தவறி விழுந்து பலி
- சாலையில் விழுந்ததில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
- களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
இடைக்கோடு மாலைக் கோடு சாமவிளை பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ் ராஜ் (வயது 33). இவர் மாலைக்கோட்டில் காய்கறி கடை நடத்தி வந்தார்.
கடந்த 19-ந்தேதி இவர், கோவிக்கரை பிரவின் ராஜ் (27), பிரதீப் (37) ஆகியோருடன் ஓரே மோட்டார் சைக்கிளில் பி கழுவன்திட்டையிலிருந்து மேல்புறம் சாலையில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்துள்ளது.
இதனால் மோட்டர் சைக்கிளை ரைஸ் செய்தபடி பிரவின் ராஜ் வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த பிரின்ஸ் ராஜ் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்துள்ளார்.
இதில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு அங்கிருந்து காரக்கோ ணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிரின்ஸ் ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.