- வாலிபருக்கு ஆயுள் தண்டனை
- நாகர்கோவில் கோர்ட்டு இன்று தீர்ப்பு
நாகர்கோவில்:
பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 26).
இவர் கடந்த 2013-ம் ஆண்டு பூதப்பாண்டி பகுதி யில் குத்தி கொலை செய் யப்பட்டார். அவரது நண்பர் தினேஷ் படுகா யம் அடைந்தார். இது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் பூதப்பாண்டி மேலரத விடுதியைச் சேர்ந்த வசந்த் (24) உள்பட 5 பேரை கைது செய்தனர். கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் சுபாஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட வசந்த் உள்பட 5 பேரும் ஜாமீனில் விடுதலை செய் யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இன்று வசந்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வழக்கு விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் குற்றம் சாட்டப்பட்ட வசந்திற்கு கொலை வழக்கிற்கு ஆயுள் தண்டனையும்,ரூ.10ஆயிரம் அபாரதம் விதித்து தீர்ப்பு கூறினார். கொலை முயற்சி வழக்கிற்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.இதையடுத்து போலீசார் வசந்தை கைது செய்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் மதியழகன் ஆஜரானார்.