உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி 

குளச்சல் அருகே 200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-10-21 07:49 GMT   |   Update On 2022-10-21 07:49 GMT
  • ரேசன் அரிசியை நாகர்கோவில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
  • குளச்சல் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

கன்னியாகுமரி:

குளச்சல் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், ஏட்டு வில்சன் ஆகியோர் குளச்சல் பகுதியில் ரோந்து சென்றனர். சைமன்காலனி பாலம் அருகில் செல்லும்போது அங்கு ஒரு மறைவான இடத்தில் சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 200 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

உடனே அவர்கள் அரிசி மூடைகளை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் ரேசன் அரிசியை நாகர்கோவில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News