உள்ளூர் செய்திகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 201 திருவிளக்கு பூஜை

Published On 2022-09-15 07:12 GMT   |   Update On 2022-09-15 07:12 GMT
  • மூன்றாம் நாளான நேற்று திருவிளக்கு பூஜை என மூன்று நாளும் பெண்களுக்கான நிகழ்ச்சி நடந்தது
  • விழா நாட்களில் திங்கள் நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டிருந்தது.

கன்னியாகுமரி :

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது.

முதல் நாள் சுமங்கலி பூஜை, இரண்டாம் நாள் அஸ்வதி பொங்காலை, மூன்றாம் நாளான நேற்று திருவிளக்கு பூஜை என மூன்று நாளும் பெண்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி தினசரி காலை கணபதி ஹோமம், உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பஜனை, மதியம் உச்சபூஜை, மாலை சாயரட்சை தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

முதல் நாள் மாலை ஆயிரக்கணக்கான பெண் கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை, இரண்டாம் நாள் மதியம் திரளான பெண்கள் கலந்து கொண்ட பொங்கல் வழிபாடு, மூன்றாம் நாளான நேற்று மாலை 5.45 மணிக்கு 201 திருவிளக்கு பூஜை, 6.15 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கோவில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு பரிசு வழங்குதல், 8 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.

மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளிலும் மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

விழா நாட்களில் திங்கள் நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டிருந்தது.

Tags:    

Similar News