உள்ளூர் செய்திகள் (District)

தக்கலையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கொண்டு சென்ற 3 பேர் கைது

Published On 2022-07-18 07:48 GMT   |   Update On 2022-07-18 07:48 GMT
  • தக்கலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் நேற்று மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
  • ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி ;

தக்கலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் கோழிப் போர்விளை பகுதி யில் நேற்று மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அப்போது 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசி னர்.

இதையடுத்து போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் கோடியூரை சேர்ந்த மணி கண்டன், முகமாற்றூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 22), பள்ளியாடி அருவிதோட்டம் பகுதியை சேர்ந்த வினித் (22) என தெரியவந்தது.

மேலும் எங்கிருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது? எனவும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News