உள்ளூர் செய்திகள்

மண்டைக்காடு அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2022-06-17 06:58 GMT   |   Update On 2022-06-17 06:58 GMT
  • சப் - இன்ஸ்பெக்டர் முரளிதரன் அழகன்பாறை பகுதியில் தீவிர ரோந்து
  • ரூ.1130 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி :

மண்டைக்காடு சப் - இன்ஸ்பெக்டர் முரளிதரன் அழகன்பாறை பகுதியில் தீவிர ரோந்து சென்றார்.

அங்குள்ள குருசடி எதிரே செல்லு்ம்போது தாவூரை சேர்ந்த ரெங்கன், குன்னங்காட்டை சேர்ந்த பிரதீஸ், பிரமேன் அழகன்பாறை ஆன்றனி ஜோசப்ராஜ், ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயற்சித்தனர்.போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ.1130 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News