உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே 5 பவுன் நகை பறிப்பு

Published On 2022-07-09 07:44 GMT   |   Update On 2022-07-09 07:44 GMT
  • வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் திருட்டு.
  • மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை

கன்னியாகுமரி:

மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவையை சேர்ந்தவர் மணி. கேபிள் டி.வி. ஊழியரான இவர் மனைவி, குழந்தைகள் மற்றும் தாயார் சாந்தம்மாள் (வயது 75) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் படுத்து தூங்கி னர்.அப்போது காற்றுக்காக சமையல் அறை ஜன்னல் கதவை திறந்து வைத்து உள்ளனர். இந்தநிலையில் இரவில் யாரோ மர்ம நபர் ஜன்னல் வழியாக கையை விட்டு கதவை திறந்து உள்ளார்.

பின்னர்வீட்டுக்குள் புகுந்த அவர் சாந்தம்மா ளின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்று விட்டார். வீடு புகுந்து நகை பறித்துச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மணவாள க்குறிச்சி போலீசில் மணி புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News