உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர்-இளம்பெண் படுகாயம்

Published On 2023-05-03 07:00 GMT   |   Update On 2023-05-03 07:00 GMT
  • காதலிப்பதாக கூறி சிறுமியை கடத்திச் சென்றது அம்பலம்
  • மாணவியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது

கன்னியாகுமரி :

குளச்சல் களிமாரை சேர்ந்தவர் விஜூ (வயது19). இவர் ஒரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் மண்டைக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

வெட்டுமடை பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்ற போது எதிர்பாராமல் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் விஜூவும் அவருடன் வந்த பெண்ணும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியினர் இருவரையும் மீட்டு உடையார் விளையில் ஒரு தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.

அங்கு இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, விஜூ காதலிப்பதாக கூறி அவருடன் வந்த சிறுமியை கடத்தி வந்தது தெரியவந்தது. இதற்கிடையில் கடத்தப்பட்ட சிறுமியின் உறவினர் குளச்சல் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

கடத்தப்பட்ட சிறுமி பிளஸ்-2 படித்து வந்துள்ளார். உறவினரின் பராமரிப்பில் இருந்து வந்த அவருக்கு, விஜூவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக இருவரும் பழகி வந்துள்ளனர். இதனை சிறுமியின் உறவினர் கண்டித்துள்ளார். இந்த சூழலில் தான் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, விஜூ ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். அப்போது தான் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உள்ளது.

இதற்கிடையில் விஜூ, மாணவியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மகளிர் போலீசார் விஜூ மீது, சிறுமி கடத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். சட்டம் - ஒழுங்கு போலீசார் விஜூ மீது விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னர். சிறுமியை கடத்தி செல்லும்போது பைக் விபத்தில் சிக்கி இளைஞர்,சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News