உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே லாரி மீது கார் மோதி விபத்து

Published On 2023-05-07 07:52 GMT   |   Update On 2023-05-07 07:52 GMT
  • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கனிமவளம் ஏற்றி வந்த லாரிமீது பயங்கரமாக மோதியுள்ளது
  • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி :

தக்கலை பகுதியை சார்ந்தவர் விஜூ கிருஷ்ணன் இருவருடைய உறவினர் ஒருவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது.அவரை வழி அனுப்பி வைப்பதற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றுள்ளார். அவரை வழியனுப்பி விட்டு இன்று அதிகாலை வீட்டுக்கு திரும்பி உள்ளார் கார் கல்லுக்கட்டி பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கனிமவளம் ஏற்றி வந்த லாரிமீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. கார் ஓட்டிவந்த விஜூகிருஷ்ணன் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News