உள்ளூர் செய்திகள் (District)
- பணம் இல்லை என்று ஆண்டனி கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சுபாஷ் மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்
- படுகாயம் அடைந்த ஆண்டனி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதி 46-ம் அன்பியத்தை சேர்ந்தவர் வில்லாரிஸ் மகன் ஆண்டனி டைனிஸ் (வயது 46). மீனவர். சம்பவ தினம் ஆண்டனி கடற்கரை பகுதியில் நிற்கும் போது, அதே பகுதி ஒன்றாம் அன்பியத்தை சேர்ந்த அகஸ்டின் மகன் சுபாஷ் என்பவர் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.
பணம் இல்லை என்று ஆண்டனி கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சுபாஷ் தகாத வார்த்தைகள் பேசி, மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஆண்டனி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.