உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே இன்று காலை கல்லூரி மாணவர் விபத்தில் பலி

Published On 2022-08-17 10:21 GMT   |   Update On 2022-08-17 10:21 GMT
  • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் மீது டெம்போ ஏறியது
  • விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் களிய க்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

இவரது மகன் தீபக் (வயது19). இவர் களியக்கா விளை அருகே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தீபக் தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தார்.

இன்று காலையும் அவர் வழக்கம் போல வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்ப ட்டுச் சென்றார்.களியக்கா விளை அருகே ஒற்றாமரம் பகுதியில் சென்ற போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்து உள்ளது. அதனை ஒட்டி வந்த தீபக் சாலையில் தவறி விழுந்தார்.அப்போது அங்கு வந்த டெம்போ எதிர்பாராதவிதமாக மாணவர் தீபக் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் களியக்கா விளை போலீஸ் நிலை யத்திற்கு தகவல் கொடுத்த னர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீபக் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக குழித்துறை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர் மீது மோதிய டெம்போ டிரைவரை போலீசார் கைது செய்தனர். விபத்து குறித்து களியக்காவிளை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News