உள்ளூர் செய்திகள்
குழித்துறையில் மேம்பாலம் பகுதியில் மின் கேபிளில் தீ விபத்து
- நேற்று இரவு 9.30 மணிக்கு பற்றி எரிந்தது
- விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர். தீயை அணைத்தனர்.
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் மேம்பாலம் பம்மத்தில் இருந்து குழித்துறை பழைய பாலம் வரை அமைந்துள்ளது. பாலத்தின் மேற்பகுதியில் மின்கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்துவதற்கு கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மேற்பகுதியில் பாலத்தின் ஓரத்தில் நின்ற மின் கேபிளில் திடீரென தீ பிடித்தது. நேற்று இரவு 9.30 மணிக்கு பற்றி எரிந்தது. இதனை வாகனத்தில் சென்றவர்கள் பார்த்து குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் .இதை அடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர். தீயை அணைத்தனர்.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.