உள்ளூர் செய்திகள்
குழித்துறை சந்திப்பில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்
- பொதுமக்கள் சேர்ந்து பஸ்சை தள்ளி சாலையோரம் நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
- சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
புத்தன் சந்தையில் இருந்து மார்த்தாண்டத்தை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
பஸ் குழித்துறை சந்திப்பில் வந்தபோது சாலையில் பழுதாகி நின்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அரசு பஸ் சாலையில் பழுதாகி நின்றதால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து பொது மக்கள் போக்குவரத்து அதிகாரிகளுக்கும், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
ஆனால் 1 மணிநேரமாகி யும் போலீசாரும், அதிகாரி களும் வர தாமதமானதால் பொதுமக்கள் சேர்ந்து பஸ்சை தள்ளி சாலையோரம் நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
அரசு பஸ் பழுதாகி நின்றதால் குழித்து றையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.