உள்ளூர் செய்திகள்
வடிவீஸ்வரத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது
- பொதுமக்கள் வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் தொல்லை செய்து வந்தது
- வனத்துறை அதிகாரிகள் குரங்கை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர்
நாகர்கோவில் :
நாகர்கோவில் வடிவீஸ்வ ரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள அண்ணா நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்கு தொல்லை இருந்து வந்தது.
பொதுமக்கள் வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் தொல்லை செய்து வந்தது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை வனத்துறை அதிகாரிகள் குரங்கை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். அண்ணா நகர் பகுதியில் குரங்கை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டது. அந்த கூண்டுக்குள் முட்டை மற்றும் தக்காளியை வைத்து குரங்கை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து குரங்கு கூண்டுக்குள் வந்தது. பின்னர் அந்த கூண்டை மூடி குரங்கை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
குரங்கு பிடிபட்டதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தார்.