உள்ளூர் செய்திகள்

என்.ஜி.ஓ.காலனி அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-08-06 08:14 GMT   |   Update On 2022-08-06 08:14 GMT
  • சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்
  • சுசீந்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள சின்ன ணைந்தான்விளையை சேர்ந்தவர் சுயம்பையா (வயது 50) கட்டிட தொழிலாளி.

இவர் சம்பவத்தன்று என். ஜி.ஓ.காலனி அருகே உள்ள முகிலன் விளையில் உள்ள அவரது பெரியம்மா தங்கநாடாச்சி வீட்டிற்கு சென்று அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் இரவு நிறுத்திவிட்டு. மறுநாள் அதிகாலையில் பார்க்கும்போது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.

அக்கம்பக்கத்தில் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து சுயம்பையா சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றார்.

Tags:    

Similar News