உள்ளூர் செய்திகள்
பொற்றையடி அருகே அனுமதியின்றி மது விற்றவர் கைது
- கரம்பவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்தார்.
- அவரிடம் இருந்து 42 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
நாகர்கோவில்:
தென்தாமரை குளம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஹரிகுமரன் நேற்று கரம்பவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்தார். இதில் அவர் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவரிடம் இருந்து 42 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர் பொற்றையடி பகுதியை சேர்ந்த நடேசன்(வயது 80) என்பது தெரியவந்தது.