உள்ளூர் செய்திகள்
திருவட்டாரில் புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 4 பாக்கெட் புகையிலை இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார், வியாபாரி மகேசை கைது செய்தனர்.
கன்னியாகுமரி :
திருவட்டார் சந்தை பகுதியில் கடை நடத்தி வருபவர் மகேஷ் (வயது 41). இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்திய போது, 4 பாக்கெட் புகையிலை இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார், வியாபாரி மகேசை கைது செய்தனர்.