உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே விபத்து - 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்

Published On 2023-05-03 06:53 GMT   |   Update On 2023-05-03 06:53 GMT
  • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது
  • விபத்தில் மோட் டார் சைக்கிளில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

கன்னியாகுமரி :

ஈத்தாமொழி அருகே உள்ள தெற்கு வள்ளியா விளை பகுதியைச் சேர்ந்த வர் நவீன் (வயது 23). இவர் நாகர்கோவில் அருகே தனியார் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வரு கிறார்.

சம்பவத்தன்று நவீன், தனது உறவினர் ரமேஷிற்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில், ரமேஷின் மனைவி அஜிதா(37), அவரது மகள் ரஸ்தியா (6), மகன் நவனேஷ் (7) ஆகியோருடன் குளச்சல் பள்ளி முக்கில் இருக்கும் பூங்காவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

குளச்சல் அருகே வெட்டுமடை பகுதியில் சென்றபோது பின்னால் ஒரு கார் வேகமாக வந்துள்ளது. அந்தக் கார் எதிர்பாராதவிதமாக நவீன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட் டார் சைக்கிளில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சல் தனியார் ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப் பட்ட பிறகு குழந்தை ரஸ்தியா, அஜிதா இருவரும் மேல் சிகிச்சைக்காக திருவ னந்தபுரம் கொண்டு செல்லப்பட்டனர். நவீன் மற்றும் நவனேஷ் நாகர்கோ வில் தனியார் ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து குளச்சல் போலீஸார் விசாரணை நடத்தி பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் சகாயராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ள னர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News