அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் விவசாயம் கருத்தரங்கம்
- விவசாயம், சுகாதாரம் மற்றும் சூழல் சார்ந்த விரிவுரை பட்டறை கருத்தரங்கை நடத்தினர்
- மாணவ மாணவியர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை பெற்று சென்றனர்.
என். ஜி. ஓ. காலனி :
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் முதுநிலை விலங்கியல் துறை, விலங்கியல் ஆராய்ச்சி மையம், கல்லூரி அகதர மதிப்பீட்டு குழு மற்றும் சென்னை தேசிய உயிரியல் அறிவியல் கலைக்கூடம் இணைந்து விவசாயம், சுகாதாரம் மற்றும் சூழல் சார்ந்த விரிவுரை பட்டறை கருத்தரங்கை நடத்தினர். கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஆட்சி மன்ற குழு தலைவர் மணி, பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரிஅகதர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளரும் கருத்தரங்ககுழு தலைவருமான பேராசிரியர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். கல்லூரி செயலாளர் ராஜன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். பேராசிரியர் சுரேஷ் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். சென்னை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக துணைவேந்தர் தாஜுதீன் தொடக்கவுரையாற்றினார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் பிரகாஷ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் இயக்குனர் டாக்டர். சுப்பிரமணியன் உட்பட பல்வேறு கல்லூரி பேராசிரி யர்கள் இதில் பங்கேற்று கருத்துரையாற்றினார்கள்.
சென்னைப் பல்கலைக்கழக தாவரவியல்துறை தலைவர் பேராசிரியர் மதிவாணன் நிறைவுரையாற்றினார். உதவிபேராசிரியர் கவியரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் தர்மலிங்கம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர் ராஜா, டாக்டர் செல்வகுமார், டாக்டர். அமுதா, அக்னேஷ்வரி ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை பெற்று சென்றனர்.