உள்ளூர் செய்திகள்
- புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் சோதனை
- ஜாண் றோஸ் என்பவரிடம் இருந்து 12 பாட்டில் மதுபானம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அதே பகுதி ஜாண் றோஸ் என்பவரிடம் இருந்து 12 பாட்டில் மதுபானம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்றதாக ஜாண் றோஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.