உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-08-17 09:42 GMT   |   Update On 2022-08-17 09:42 GMT
  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இடது கால் அகற்றபட்டதால் வாழ்க்கை வெறுப்பு அடைந்த நிலையில் இருந்து வந்ததுள்ளார்.
  • இரணியல் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கன்னியாகுமரி:

இரணியல் அருகே கண்டன்விளை என்ற இடத்தை சேர்ந்த வர் லாசர் (வயது 67) இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இடது கால் அகற்ற பட்டதாக தெரிகிறது இதனால் வாழ்க்கை வெறுப்பு அடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ஏதோ விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர் மருத்துவர் கள் பரிசோதனை செய்து விட்டு வரும் வழியிலேயே லாசர் இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து அவரது மகன் ஜாய்லாசர் அளித்த புகாரில் பேரில் இரணியல் போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News