உள்ளூர் செய்திகள் (District)
கொல்லங்கோடு அருகே குட்கா விற்ற முதியவர் கைது
- இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் நேற்றிரவு அடைக்காகுழி பகுதியில் ரோந்து
- கடையில் பதுக்கி வைத்திருந்த 130 பாக்கெட் குட்கா மற்றும் ரூ. 3600 ஐ பறிமுதல்
நாகர்கோவில் :
கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் நேற்றிரவு அடைக்காகுழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சாத்தனார் வட்டம் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தனர்.
சோதனையில் அங்கு குட்கா பொருட்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கடையில் பதுக்கி வைத்திருந்த 130 பாக்கெட் குட்கா மற்றும் ரூ. 3600 ஐ பறிமுதல் செய்த போலீசார் ஏசுதாஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.