உள்ளூர் செய்திகள் (District)

குளச்சலில் காற்றுக்குப்பின் மீன்பிடிக்க சென்ற கட்டுமரங்களில் சிக்கிய நெத்திலி மீன்கள்

Published On 2023-06-13 07:36 GMT   |   Update On 2023-06-13 07:36 GMT
  • விலை வீழ்ச்சியால் மீனவர்கள் கவலை
  • ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.1000 முதல் ரூ.1500 வரை விலைபோனது

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழும். அதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின.

கடந்த 1-ந்தேதி விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் தற்போது மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. வழக் கம்போல் கட்டுமரங்கள் மீன்பிடித்து வந்த நிலையில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டதால் பாது காப்பு கருதி கட்டுமரங்களும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் குளச்சலில் மீன் வரத்து குறைந்தது. இதற்கிடையே நேற்று முதல் குளச்சல் கடல் பகுதியில் காற்று சற்று தணிந்து காணப்படு கிறது. இதையடுத்து இன்று கட்டுமரங்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இவற்றுள் ஏராளமான நெத்திலி மீன்கள் பிடிப்பட்டன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.1000 முதல் ரூ.1500 வரை விலைபோனது. கடந்த சீசனில் இந்த மீன்கள் ரூ.2 ஆயிரம் வரை விலை போனது என்பது குறிப்பி டத்தக்கது. இன்று குளச்ச லில் நெத்திலி மீன்கள் அதிகமாக கிடைத்தும் விலை குறைவாக விற்பனை ஆனதால் கட்டுமர மீன வர்கள் கவலையடைந்தனர்.

Tags:    

Similar News