உள்ளூர் செய்திகள்
கொட்டாரம் சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
- லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவரிடம் ரூ.41 ஆயிரம் பணம் இருந்தது
- 6 மணி நேரம் நடந்த விசாரணையில் பணத்திற்கான விவரங்களை தெரிவிக்கவில்லை.
நாகர்கோவில் :
கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்ட னர்.
சார்பதிவாளர் பொறுப்பு அதிகாரி அன்வர் அலியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவரிடம் ரூ.41 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அன்வர் அலியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர் . 6 மணி நேரம் நடந்த விசாரணையில் அவர் பறிமுதல் செய்த பணத்திற்கான விவரங்களை தெரிவிக்கவில்லை.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அன்வர் அலி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.