உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழி ஆலமூடு அம்மன் கோவில் பூக்குழி திருவிழா

Published On 2022-07-27 07:53 GMT   |   Update On 2022-07-27 07:53 GMT
  • ஆண்டுதோறும் ஆடி மாதம் கொடை விழாவும் பூக்குழி திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்
  • அம்மன் சன்னதியில் 108 கலச பூஜை அபிஷேகங்கள் சுவாமிகள் பாயாச குளியல் அலங்கார தீபாராதனை

கன்னியாகுமரி :

ஆரல்வாய்மொழி முப்பந்தல் ஸ்ரீ ஆலமூடு அம்மன் திருக்கோவில் கொடை விழா மற்றும் பூக்குழி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இசக்கி அம்மன் ஆலயத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஸ்ரீ ஆலமூடு அம்மன் ஆலயம். ஆண்டுதோறும் ஆடி மாதம் கொடை விழாவும் பூக்குழி திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று அதிகாலை மகாகணபதி ஹோமம் அபிஷேக கறிவகைகள் ஆரல்வாய்மொழி வடக்கூர் அகழியின் ஊற்று பிள்ளையார் கோவில் முன்பு இருந்து யானைகள் பூங்கரம் அபிஷேகங்கள் முளைப் பாத்தி பறவைக்காவடி சூரிய காவடி ஊர்வலத்தை ஆலமூடு அம்மன் டிரஸ்ட் நிர்வாகி டாக்டர் அருணாசலம் தலைமையில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்றத் தலைவர் முத்துக்குமார் துவக்கி வைத்தார். அதன் பின்பு நடந்த அன்னதான நிகழ்ச்சியை குமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அம்மன் சன்னதியில் 108 கலச பூஜை அபிஷேகங்கள் சுவாமிகள் பாயாச குளியல் அலங்கார தீபாராதனை அக்னிச்சட்டி எடுத்தல் அம்மன் தேரில் பவனி வருதல் பூக்குழி பூசையும் அக்கினி பக்தர்கள் பரவசத்தோடு பூக்குழி இறங்கி விளையாடினார்கள் அதன்பிறகு அலங்கார தீபாராதனை ஊட்டும் படைத்தல் நடைபெற்றது.

இன்று பொங்கல் வழிபாடு தீபாவளி மஞ்சள் நீராடுதல் அன்ன தானம் ஆகியவை நடைபெற உள்ளது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தியும் கலந்து கொண்டார்கொ டை விழா ஏற்பாடு களை ஸ்ரீ ஆலமூடு அம்மன் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் டாக்டர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள் பக்தர்கள் சேவா சங்கம் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News