ஆசாரிபள்ளம் அருகே ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது தாக்குதல்
- பஸ் சென்று கொண்டிருந்த போது வறுவேல்ராஜ் கண்டக்டர் பொன்னப்பனிடம் தகராறில் ஈடுபட்டார்.
- தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கையால் தாக்கினார்.
நாகர்கோவில் :
கட்டிமாங்கோடு வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பொன்னப்பன் (வயது 51). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர் சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது சரல் பகுதியை சேர்ந்த வறுவேல்ராஜ் (50) என்பவர் பஸ்சில் ஏறினார்.
ஆசாரிப்பள்ளம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது வறுவேல்ராஜ் கண்டக்டர் பொன்னப்பனிடம் தகராறில் ஈடுபட்டார். பஸ்சை வேகமாக இயக்குமாறு கூறி தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த வறுவேல்ராஜ் கண்டக்டர் பொன்னப்பனை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கையால் தாக்கினார். இதுகுறித்து பொன்னப்பன் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வறுவேல்ராஜ் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.