உள்ளூர் செய்திகள்
பேச்சிப்பாறை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்
- டெம்போ டிரைவர் பலி
- குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே பேச்சிப்பாறை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38) சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும் சிவஜித் என்ற மகனும் உள்ளனர்.
இவர் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறை நோக்கி சென்றார். திருநந்திக்கரை செங்கோடு பகுதியில் சென்ற போது, சொகுசு கார் வேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜேஷ் தூக்கி வீசப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது ராஜேஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவப்பிரியா கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.