உள்ளூர் செய்திகள்

அத்திக்கடை கால்வாய் தூர்வாரும் பணியை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்ட காட்சி

நாகர்கோவிலில் அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-10-26 06:46 GMT   |   Update On 2022-10-26 06:46 GMT
  • கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட்டது.
  • சானல் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டார்

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பள்ளி கட்டிடங்களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார். சானல் தூர்வாரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதி களில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. நாகர் கோவில் மாநகராட்சிக்குட்பட்ட நாகர்கோவில் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் 20 ஆண்டு களுக்கு மேல் கட்டப்பட்ட வகுப்பறையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த பகுதிகளை சீரமைக்குமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இடலாக்குடி அரசு தொடக்கப் பள்ளி வகுப் பறை கட்டிடத்தினை யும் பார்வையிட்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட்டது.

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட ஆத்திக்காட்டுவிளை ஊராட்சி, சீயோன்புரம் அரசு தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம், கணியாகுளம் ஊராட்சி புளியடி அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறை கட்ட டம், புத்தேரி அரசு தொடக் கப்பள்ளி கட்டடத்தினை ஆய்வு மேற்கொண்டு அக் கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்கள், துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. வட கிழக்கு பருவமழை பெய்து வருவதால் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பழுதடைந்த கட்டிடங்களை விரைந்து சரிசெய்யவும், மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை உடனடியாக அப்புறப்ப டுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து தர்மபுரம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட் டத்தின்கீழ் அத்திக்கடை கால்வாயினை தூர்வாரும் பணியினை நேரில் பார் வையிட்டு, வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரை வீணாக்காமல் விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News