உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு மிரட்டல்; செல்போன் உடைப்பு

Published On 2023-01-18 09:09 GMT   |   Update On 2023-01-18 09:09 GMT
  • மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் வாலிபரை கண்டித்ததாக தெரிகிறது.
  • மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் .அங்கு வந்த வாலிபர் திடீரென மாணவியிடம் தகராறில் ஈடுபட்டார்

நாகர்கோவில் :

நாகர்கோவில் வேதநகர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் இறச்சகுளம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

தினமும் இவர் கல்லூரிக்கு பஸ்ஸில் செல்வது வழக்கம். அப்போது மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் வாலிபரை கண்டித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் .அங்கு வந்த வாலிபர் திடீரென மாணவியிடம் தகராறில் ஈடுபட்டார். மாணவியின் கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கி உடைத்ததுடன் மிரட்டல் விடுத்தார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.

இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுது உள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தனர்.

புகாரின்பேரில் வாலிபர் மீது கொலை மிரட்டல் உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News