நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்த கட்டிட தொழிலாளி தற்கொலை
- வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- தூக்கில் பிணமாக தொங்கியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் தெங்கன் குழி விளை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 33), கொத்தனார்.
இவர் சரஸ்வதி (21) என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மகேஷ் குமார் -சரஸ்வதி தம்பதியினர் நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியில் வசித்து வந்தனர். சரஸ்வதி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் மகேஷ் குமார் மட்டும் இருந்தார். இன்று காலை சரஸ்வதி வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மகேஷ் குமாரை பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை .இதையடுத்து ஜன்னல் வழியாக சரஸ்வதி பார்த்தபோது மகேஷ் குமார் தூக்கில் பிணமாக தூங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார் .இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய மகேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். திருமணமான 6 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.