உள்ளூர் செய்திகள்

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணி

Published On 2022-06-21 07:15 GMT   |   Update On 2022-06-21 07:15 GMT
  • அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்
  • அப்பட்டுவிளை அந்தோணியார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நமக்கு நாமே திட்டம்

நாகர்கோவில் :

தக்கலை ஊராட்சி ஒன்றியம், கோதநல்லூர் மற்றும் திருவிதாங்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிறைவு பெற்ற பணிகளை தொடங்கி வைத் தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் அமைச் சர் மனோதங்கராஜ் கூறியதாவது:-

தக்கலை ஊராட்சி ஒன்றியம், சடையமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ண மங்கலம் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிைறவேற்றும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் புதிய இ-சேவை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக வருமான சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், சாதி சான்றதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சிறு குறு விவசாயி சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், வேலை யில்லாதவர் சான்றிதழ், அடகு வணிகர் சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ், கடன் கொடுப் போர் உரிமம், செல்வநிலை சான்றிதழ், பட்டா மாறுதல், உட்பிரிவு செய்து பட்டா மாற்றுதல், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், பெண் குழந்தை கள் பாதுகாப்பு திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற முடியும்.

அப்பட்டுவிளை அந்தோணியார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நமக்கு நாமே திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.75 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட் டுள்ள சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. மேலும், கோதநல்லூர் பேரூராட்சிக் குட்பட்ட ஈத்தவிளை அங்கன்வாடிக்கு என பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பிலும், திருவிதாங்கோடு பேரூராட் சிக்குட்பட்ட செட்டியார் விளை மற்றும் பரைக்கோடு பகுதிகளில் தலா ரூ.7 லட்சம் மதிப்பில் 2 புதிய அங்கன் வாடி கட்டிடம் என மொத்தம் ரூ.22 லட்சம் மதிப்பில் 3 புதிய அங்கன் வாடி கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோதநல்லூர் பேரூராட் சிக்குட்பட்ட ஈத்தவிளை அரசு ஆரம்ப பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இன்றைய தினம் மட்டும் ரூ.37.75 லட்சம் மதிப்பில் முடிவற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளில் பேரூ ராட்சி தலைவர்கள் கிறிஸ்டல் பிரேம குமாரி (கோதநல்லூர்), நாசர் (திருவிதாங்கோடு), அரசு வக்கீல் ஜெகதேவ், சடைய மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அருள்ராஜ், அப் பட்டுவிளை பங்கு தந்தை மைக்கேல் அேலாசியஸ், ஜாண் பிரைட், அருளானந்த ஜார்ஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News